20150819041314

பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 7 மற்றும் 11 வது வார்டு மக்கள் பணியில் ஈடுபட்டனர்

7 மற்றும் 11 வது வார்டு மக்கள் பணியில் ஈடுபட்ட அன்று கடந்த 15ந் தேதி அரசு விடுமுறையானதாலும் நேற்று அவ்வூராட்சியின் துணை தலைவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாலும் விடுமுறை விடப்பட்டது.

எனவே விடுமுறை விடப்பட்ட 2 நாட்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று 7 மற்றும் 11 வது வார்டு பொது மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் விடுமுறைக்கான காரணத்தை கூறி இன்றும் நாளையும் தாங்களே வேலை செய்யுமாறு கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!