பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நேற்று இரவு 11 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன்படி வேப்பந்தட்டையில் 136 மில்லி மீட்டரும், தழுதாழையில் 47 மில்லி மீட்டரும், பெரம்பலுாரில் 42 மில்லி மீட்டரும், செட்டிக்குளத்தில் 18 மி்ல்லி மீட்டரும் மழை பெய்தது.
மழையின்போது எளம்பலுார் எம்.ஜி.ஆர்., நகரில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் என்பவரது தொகுப்பு வீட்டின் மீது இடிதாக்கியதில் அவரது வீட்டின் சுவரில் விரிசலுடன் துவாரம் விழுந்தது.
ராமச்சந்திரன் கையில் சிராய்ப்பு ஏற்பட்டதுடன். இவரது செல்போன் வெடித்தது. இப்பகுதியில் வீட்டிலிருந்த பத்துக்கும் மேற்பட்ட டிவி பழுதானது.