பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
கடலுார் மாவட்டம் தொழுதுாரை சேர்ந்தவர் மாணி்க்கம் மகன் சாத்தப்பன்(45), புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுப்பையா மகன் சண்முகம்(50), இவர்கள் இருவரும் இன்று மாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பைக்கில் பெரம்பலுாரிலிருந்து தொழுதுார் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.
டூவீலர் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகே சென்ற போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் டூவீலர் மீது மோதியது.
இதில் சாத்தப்பன், சண்முகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இது குறித்து மங்கலமேடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்











kaalaimalar2@gmail.com |
9003770497