பெரம்பலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 182 அலோபதி மருந்துக்கடைகள் மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுப்படடனர்.
இன்று காலை 10.30 மணி அளவில் பெரம்லூர் பழைய பேருந்து நிலையம் பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன்பு மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வணிகர் சங்கத்தின் மாநில துணை பொறுப்பாளர்கள் ஏ.கே.வி. சண்முகநாதன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். செந்தூர் மெடிக்கல் உரிமையாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.