fire_accident_vengalam

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 40). இவருக்கு சொந்தமான கூரை வீடு இன்று மாலை வீட்டில் ஆள் யாரும் இல்லாத போது தீடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், அருகில் உள்ள வீடுகளுக:கு தீ பரவாமல் தடுத்தனர்.

அப்போது ராஜேந்திரனின் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீக்கான காரணம் மின்கசிவு எனவும், அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா;பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!