2 arrested for selling Gutka in Perambalur; 107 kg seized! Police are conducting a investigation !!

பெரம்பலூர் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் திருச்சி OICU குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள காமராஜ் வளைவு பகுதியில் (பாபாராம்தேவ் மார்க்கட்டிங்) கடை நடத்தி வரும் சோனாராம் மகன் பிரவீன்குமார் (வயது 22), கடையிலும், இது போன்று எளம்பலூர் சாலையில் (ஓம்சக்தி) ஏஜென்சீஸ் நடத்தி வரும் சந்திரகாசன் மகன் குமார் (வயது 55) என்பவரின் கடையிலும் விற்பனை செய்யப்படுவதை கண்டுப்பிடித்தனர். அதோடு இருவரின் கடைகளில் இருந்தும் சுமார் 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்து பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் முன்னிலையில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் , யார் அனுப்பினார்கள், எங்கிருந்து வினியோகம் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!