20 pounds gold jewellery cash Perambalur 1.5 kg silver products farmer home theft

பெரம்பலூர் அருகே பூட்டியிருந்த விவசாயி வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 54). விவசாயியான இவர் நேற்று காலை உறவினர் வீட்டிற்கு, வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இன்று மதியம் 3 மணியளவில் திரும்பி வந்த பார்த்த போது வீட்டினுள் இருந்த 20 பவுன் நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்களை வீட்டினுள் இருந்த கடப்பாரையை கொண்டு பீரோவை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. களவு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 5லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!