2nd anniversary of late leader M. Karunanidhi
பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி, பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கவுரவிக்கப்ட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், தொழிலதிபர் ப.பரமேஷ்குமார், மாவட்ட துனைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பொன்னாடை அனிவித்து மரியாதை செய்யப்பட்டது.