A lorry driver who was loading bricks near Perambalur was electrocuted and killed.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் வீட்டிற்கு சேலத்திற்கு ஒரு லாரி செங்கல் ஏற்றிக் கொண்டு இறக்க வந்தது. இன்று விடியற்காலை நேரம் என்பதால் அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியது. அப்போது மின்சாரம் ஷாக் அடித்ததால், லோடு மேன்கள் மேலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் பெரம்பலூர் மாவட்டம், சித்தளியை சேர்ந்த அண்ணாமலை மகன் ஆனந்தராஜ் (27) லாரியில் இருந்து தூக்கி வீசியது. கீழே விழுந்த ஆனந்தராஜ் மூச்சு பேச்சு இல்லாத நிலையில் கிடந்ததை கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆனந்தரராஜை மீட்டு ஆசுவாசுப்படுத்தி முதலுதவி கொடுத்தனர். உயிர்பிழைத்த ஆனந்தராஜ் வலியால் துடிதுடித்தார். பின்னர், பொது மீண்டும் செயற்கை சுவாசம் கொடுத்து காப்பற்ற முயன்ற போது தான் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் திருமணமாகி சுமார் ஓர் ஆண்டு கூட ஆகாத நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.