After 14 years in Kunnam village, Mariamman Chariot: Minister Sivashankar took the reins!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்பு இன்று காலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. அதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி ராஜேந்திரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் டாக்டர் கருணாநிதி, ஆர்டிஓ நிறைமதி, தாசில்தார் அனிதா, முன்னாள் யூனியன் சேர்மன் அழகு நீலமேகம் உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள் அறநிலை துறை இந்து சமய நிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.