allow jallikattu annamankalam coming Feb. 25th !
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் வரும் பிப்25ல் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு வெகுசிறப்பாக நடைபெறும்.
பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்ள உள்ளன.
அன்னமங்கலம் கிராமத்தில் வாடி வாசல் அமைக்கவும், ஆயத்த பணிகளையும் அக்கிராம இளைஞர்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். காளைகளை அடக்கும் காளையர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு நிகழச்சியை காண இந்து, முஸ்லீம் மதத்தை சார்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல், தீயணைப்பு வருவாய், மருத்துவ துறையினரும் தயாராகி வருகின்றனர்.