arrested one of the Goondas Act in perambalur
பெரம்பலூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.
பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் ராகவேந்திரா (வயது 21). இவர் மீது, கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுனரை கத்திய காட்டி மிரட்டிய வழக்கும் உள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் பெரம்பலூர் போலீசார் ராகவேந்திரா மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.