Arun, a social worker who was running a charity house in Perambalur, has passed away.
பெரம்பலூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தீரன் நகர் குடியிருப்பு அருகே வேலா கருணை இல்லத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக சேவகருமான அருண் இன்று காலமானார். அதிகாலை ஏற்பட்ட நெஞ்சுவலிக்கு திருச்சி தனியார் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவர்கள் அவர் உயிரிழந்தாக தெரிவித்துவிட்டனர். காலை 11 மணி அளவில் அவரது நல்லடக்கம் திருச்சியில் நடைபெற்றது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டு வழித்தவறி வந்தவர்களை மீட்டு பலரை காப்பாற்றியும், ஆதரவு கொடுத்தும், பலருக்கு சிகிச்சை வழியாக மீட்டும் மறுவாழ்வு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.