At Perambalur Collectorate, Siddha Medicine and Corona Prevention Camp was held this morning!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், இன்று, இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் வெங்கடபிரியா உரையாற்றினார்.

மாவட்ட சுகாதாரப்பணிகள் நலத்துறை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், சித்த மருத்துவர்கள் கலைச்செல்வி, செந்தமிழ்செல்வி, மாவட்ட திட்ட இயக்குனர் லலிதா, மற்றும் அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில், மூலிகை சூப், சூரணங்கள், லேகியம், வழங்கப்பட்டது. மூலிகை செடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. தோல் நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி, மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, சிறுநீரக கல்லடைப்பு, வயிற்றுப் புண், நீரிழிவு நோய், சினைப்பை நீர்கட்டி, தைராய்டு நோய், மற்றும் நாள் பட்ட நோய்களுக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!