Bus Siege and Road Blockcade for demanding drinking water near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட எறையூர் ஊராட்சியில் குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அவ்வழியே வந்த அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தின் பேரில் கலைந்து சென்றனர். எறையூரில் இருந்து பெருமத்தூர் வழியாக வேப்பூர் செல்லும் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!