Chief Minister K. Palanisamy inaugurated the facility for the functioning of the Perambalur Youth Justice Council through a video presentation.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கடந்த நவ 24 காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதிக் குழுமத்தில் இணைய வழி காணொலி காட்சியினை திறந்து வைத்தார். இக்காணொலி காட்சி வாயிலாக தமிழக அளவில் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளின் வழக்குகளை கையாள்வதற்கும், விரைந்து முடிப்பதற்கும் குழந்தைகள் தொடர்புடைய பிற மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்துடன் இணைந்து குழந்தைகளின் மறுவாழ்வு மேற்கொள்வதற்கும், சட்டத்திற்கு முரணான செயல் புரிந்ததாக கருதப்படும் குழந்தைகளை அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக விசாரணை செய்வதற்கும், முன்னோடி திட்டமாக இக்காணொலி காட்சி துவைக்கி வைக்கபட்டுள்ளது என அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!