Chief Minister’s visit to Perambalur on the 27th: Intensive preparations
பெரம்பலூருக்கு வரும் 27ம்தேதி முதல்வர் வருகையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுத்தல் நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வரும் 27ம்தேதி கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்
நடைபெறுகிறது. மேலும் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்துவைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா மேடை பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகம் சுற்றிலும் தூய்மை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்எல்ஏக்கள் ஆர்.டி.இராமச்சந்திரன், ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது டிஆர்ஓ ராஜேந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.