Collector orders order against three persons arrested and jailed in Perambalur murder case

பெரம்பலூர் நகரில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த அமுமுக பிரமுகர் வல்லத்தரசு (எ) பாண்டி மற்றும் ரவுடி வீரமணிகண்டன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (31), விஷ்வா(19) மற்றும் முருகேசன்@பழனியாண்டி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்ததன் பேரில், மேற்கண்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் வே.சாந்தா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குண்டர் சட்ட நகல் சிறை கண்காணிப்பாளர் மற்றும் குற்றவாளிகள் மூவரிடமும் பெரம்பலூர் போலீசாரால் வழங்கப்பட உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!