Cookery work at Perambalur branch jail

பெரம்பலூர் கிளைச் சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிறைத்துறையின் கீழ் இயங்கும் திருச்சி, மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் கிளைச் சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் பணியில் இரண்டு வருடம் அனுபவம் பெற்று 01.07.2016 அன்று 18 வயதுக்கு மேற்பட்டவராக (பொதுபிரிவினருக்கு 30 வயது, எம்.பி.சி – டி.என்.சி-ல் 33 வயது, எஸ்.சி – எஸ்.டி-ல் 35 வயதுக்குட்பட்டவராக) இருக்கவேண்டும்.

இப்பதவிக்கு ஊதிய விகிதம் 4,800-10,000 + தர ஊதியம் 1400ல், இனசுழற்சியின் அடிப்படையில் பொதுப்போட்டி, பொது, முன்னுரிமை அற்றவர், மற்ற வகையினர் ( GT-GL-NP-மற்றவை-1-ன் கீழ்) தெரிவு செய்து நியமனம் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை 20.07.2017-க்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!