Demonstration at Perambalur demanding permanent exemption for NEET Exam
பெரம்பலூரில் திராவிடர் கழகம் சார்பில், இன்று அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், தி.க சார்பில் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கு அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், வி.சி.க., மார்க்சிய கம்யூனிஸ்ட், த.மு.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுத்தறிவாளர் கழகம், ம.ம.க., அமைப்பு சாரா சங்கம், சி.ஐ.டி.யூ ஆட்டோ சங்கம், மக்கள் உரிமை கூட்டியக்கம், பகுஜன் சமாஜ் கட்சி, அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம், ஒடுக்கப்பட்டோர் சங்கம், உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளை சார்ந்தவர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர்.