District AIADMK meeting of the Women’s Committee in the resolution Passed; To mark the anniversary of former CM Jayalalithaa’s

பெரம்பலூரில் உள்ள நான்கு ரோட்டில் உள்ள தனியர் நட்சத்திர ஹோட்டலில், அதிமுக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் எம்.எல்.ஏவும், மாவட்ட மாணவரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான இளம்பை இரா.தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணமூர்த்தி, சசிக்குமார், ரவிச்சந்திரன், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பேரூர் கழக செயலாளர் பூலாம்பாடி வினோத், குரும்பலூர் செல்வராஜ், மற்றும் பல்வேறு அணிநிர்வாகிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவுநாளை (டிச.5) முன்னிட்டு, அனைத்து கிளைகளிலும் கட்சி கொடி ஏற்றி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு, மகளிர் குழு அமைக்கவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!