Exhibition of products produced by Women Self Help Groups at Perambalur Private College

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீசாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கல்லூரி சந்தை கண்காட்சி, மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நேற்று முதல் நாளை 13ம் தேதி வரை நடக்கிறது.
இதில் 45 மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் ஆயத்த ஆடைகள், ஊறுகாய்கள் ரகங்கள், கைவினைப் பொருட்கள், மரச்சிற்பங்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், மண்பாண்டங்கள்போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளது. இதில், ஏராளமான கல்லூரி மாணவ – மாணவர்கள் கண்டு களித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!