Fines for drivers and workshops that obstruct traffic on the roads, confiscation action; Perambalur RTO Alert!
பெரம்பலூர் மாவட்டத்தில் செல்லும்,
சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை 4 ரோடு அணுகு சாலையில் பணிமனை உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை வரைமுறை இன்றி நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறுகள் மற்றும் விபத்து ஏற்படுவதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பணிமனை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டுநர்களிடம் இனிவரும் காலங்களில் அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறுராக வாகனங்களை நிறுத்தினால், மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதோடு, பணிமனைகளில் வாகனங்களை முறையில்லாமல் நிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆர்.டி.ஓ கணேசன் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தார்.