Died ; Perambalur Brahma Rishi Hill Mother Siddhar (A) Rajkumar.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர் கோவிலை அமைத்தவரும், மகாசித்தர்கள் அறக்கட்டைளை நிறுவனருமான ராஜ்குமார் இன்று மதியம் 2 மணியளவில் காலமானார். அவருக்கு வயது (65 ). பல்வேறு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும், பல கோயில்களுக்கு குடமுழுக்கு மற்றும் புணரைமைப்பு பணி செய்து வந்தார். சித்த மருத்துவம் கற்ற அவர் நோய்களுக்கு தீர்க்கும் பல மருந்துகளை சித்த வைத்திய முறையில் தலையாட்டி சித்தரின் வழியில் சீடராக இருந்து தயாரித்து கொடுத்து வந்தார். இவருக்கு சிங்கப்பூர், மலேசியா, இந்தோனோசியா, கனடா, அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இவருக்கு சீடர்கள் உள்ளனர். இன்று இரவே அவர் வசித்து எளம்பலூரில் நல்லடக்கம் நடைபெறுகிறது.