In Perambalur, the fire department Trichy regional players started the tournament today
தீயணைப்பு துறை வீரர்களுக்கான திருச்சி மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று பெரம்பலூரில் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணித்துறை வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் திருச்சி, பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்களுக்கு, முதலில் துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நீச்சல், தடகளம், கைப்பந்து, இறகுப் பந்து, போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வரும் பிப்.19 நடைபெறுகிறது. இதில் திராளான அதிகாரிகள், அலுவர்கள் கலந்து கொண்டனர்.