In PWD GO Issued for Perambalur, Construction and Maintenance Divisional Office: Builders, Public Works Contractors Thanks Govt!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு என தனியா இல்லாமல், பொதுப்பணித்துறையின் புதிய கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம் அரியலூர் மாவட்டத்தில் இருந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு என தனியாக கோட்ட அலுவலகம் கோரி, கட்டுனர்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்தாரர் நீண்ட நாளை கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது.

விளம்பரம்:



இதனால், பொதுமக்கள் வேல்யூசன், வாடகை நிர்ணயம், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரியலூர் சென்று அலையாமல் பெரம்பலூரிலேயே பார்த்து கொள்ளலாம்.

அலுவலகத்தின் செயற்பொறியாளராக வெங்கடாசலம் பதவி ஏற்றுக் கொண்டார்.

தமிழக அரசை பாராட்டுவதோடு, பெரம்பலூர் மாவட்ட கட்டுமான ஒப்பந்தரார்கள் சங்கம், பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!