Independence Day Celebration at Almighty Vidyalaya Public School! A.Ramkumar Chairman flag hoisted.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் 74 வது இந்திய சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளி சேர்மன் ஆ. ராம்குமார் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி துணைமுதல்வர் சாரதா செந்தில் குமார் முன்னிலை வகித்தார். சிறுவாச்சூர் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் ஆசிரியைகள் சந்திரோதயம், நதியா, அஸ்வினி ராஜேந்திரன், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.