Jactto – Geo demonstration to demands

3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பபடுத்தவும், ஊதியக் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களையவும்,ஊதியக் குழு அமல்படுத்தும் பரிந்துரை அமல்படுத்தும் வரை 2016 ஜன.01 முதல் 20 சதவீத இடைக்கால நிவராணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அனைத்து ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த இருபாலர்களும் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!