Kerosene prices rise in Perambalur district ration shops

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையினை அரசு உயர்வு செய்து ஆணையிட்டதன் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நியாயவிலைக் கடைகளிலும் வரும் அக்.1 முதல் மண்ணெண்ணெய் விற்பனை விலை, பெரம்பலூர் நகராட்சி பகுதியில் தற்போதைய விலை ரூ.14.00-லிருந்து ரூ.15.30 விலையாகவும், பேரூராட்சியில் ரூ.14.00-லிருந்து ரூ.15.40-ஆகவும், கிராம ஊராட்சியில் ரூ.14.10-லிருந்து ரூ.15.60-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திருத்தப்பட்ட விலையில் பொதுமக்களுக்கு நியாயவிலை அங்காடி சில்லறை விற்பனை மையம் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!