“Kongu Velalar Manacheer” book launch in Malaysia: Special guest International businessman DATO S PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies attended.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், கொங்கு நலனபிவிருத்தி மன்றத்தின் சார்பில், கொங்கு பகுதி மக்களின் சாங்கியம் சடங்குகள் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பெண்கள் தயாரித்த “கொங்கு வேளாளர் மணச்சீர்” என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு எம்.எல்.ஏவும், கொ.ம.தே.க பொதுச்செயலாளமான ஈ.ஆர்.ஈஸ்வரன், அந்த மன்றத்தின் ஆலோசகரும், பன்னாட்டு தொழிலதிபருமான டத்தோ. எஸ். பிரகதீஸ்குமார், உள்ளிட்ட மலேசியா வாழ் தமிழர்கள், முக்கிய பிரமுகர்கள், திரளானோர் கலந்து கொண்டனர்.