Labbaikudikadu – Attur New Bus Route: Transport Minister Sivasankar inaugurated today.
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூரில் இருந்து தொழுதூர், வி.களத்தூர், பசும்பலூர், கை.களத்தூர் வீரகனூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் வரை செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்து வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட்பிரியா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்தமிழ்செல்வி , முன்னாள் வரகூர் எம்.எல்.ஏ பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர் உசேன், துணை தலைவர் எ.ரசூல்அகமது உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.