Liquor theft by breaking Tasmac store lock near Perambalur Police investigation !!
பெரம்பலூர் அருகே குன்னம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் அரசு மதுபான கடையில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கைவரிசை காட்டினர். ரூ.3500 மதிப்பிலான மதுபானங்கள் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து விற்பனையாளர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.