Lorry bike collision near Perambalur mishap: Death of youth One person was hospitalized
பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த மதனை மகன் சார்லஸ் (வயது 19 ). அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிராஜ் (வயது 20), இருவரும் இன்று இரவு 8 மணியளவில் பெரம்பலூர் வந்துவிட்டு சொந்த ஊரான அன்னமங்கலத்திற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர்.
பைக்கை சார்லஸ் ஓட்டி வந்தார். பைக் கோனேரிப்பாளையம் பைபாஸ் சாலையை கடந்து ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதே வழியில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி எதிர்பாரத விதமாக பைக் மீது மோதியது. இதில சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிராஜ் படுகாயம் அடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் விபத்தில் சிக்கிய மணிராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிசிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
சார்லஸ் உடலையும், உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தான லாரி ஓட்டுனர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.