Model election at a government school near Perambalur: Students themselves became candidates, voters and election officers.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், விஜயகோபாலபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில இன்று மாலை 3.00 மணியளவில் மாதிரி வாக்குச்சாவடி மைமம் அமைத்து, மாதிரி தேர்தல் நடைபெற்றது. இதில் எங்கள் பள்ளி மாணவர்களே வேட்பாளர்களாக நின்றனர். எங்கள் பள்ளி மாணவ மாணவிகளே தலைமை அலுவலர்களாகவும், மற்றும் அலுவலர்களாக பணியாற்றினர் . இதில் பள்ளி மாணவ தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதை பள்ளி தலைமை ஆசிரின் இரா.விஜயா சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். கணித பட்டதாரி ஆசிரியர் ரா. இளவரசி மற்றும் அறிவியல் ஆசிரியர் ப. செல்லம் ஆகியோர் மாணவர்களை தேர்தல் குறித்து விழிப்புணர்வும், ஆலோசனைகளையும் கொடுத்து வழிநடத்தினர். இதில் மாணவர்கள் தேர்தல் குறித்த விவரங்களை அறிந்து கொண்டனர்.