Muslims killing in Myanmar: MMK Protest in Perambalur
பெரம்பலூரில் முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மியான்மர் நாட்டில் முஸ்லீம்மக்களை குறிவைத்து இனப்படுகொலை செய்துவரும் மியான்மர் அரசையும், அங்குள்ள புத்த துறவிகளை கண்டித்தும், மியான்மரில் இளம் சிறுமிகள்,பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்து அவர்களை கொலை செய்துவரும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் இன்று மாலை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்தான்மொய்தீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரஷீத் அகமது வரவேற்றார்.
தலைமை கழக பேச்சாளர் நாசர் அலிகான் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினர். இதில் முஸ்லீம்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது அனீபா நன்றி தெரிவித்தார்.