Mysterious persons set fire to onion shed near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் இரு தரப்பினரிடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. போலீசார் இரு தரப்பிலும் சுமார் 34 பேர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஊர் அருகே இருந்த வெங்காயம் ஆயும் கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.