Nepali worker arrested for having unnatural sex with calf near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் பிரிவு சாலை உள்ளது. அப்பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி மனைவி பெருமாயி (சுமார் வயது 40). இவர் பட்டியில் கட்டியிருந்த கன்றுகுட்டிகளில் ஒன்று வெளியே சுற்றி வந்துள்ளது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், கன்றுக்குட்டி குறித்த தகவலை பெருமாயிடம் தெரிவித்துள்ளனர். அவர் பட்டியில் வந்த பார்த்த போது, மற்றொரு கன்றுக் குட்டியும் காணவில்லை. இது குறித்து தேடிய போது மற்றொரு கன்றுக்குட்டி பின்னங்காலில் பழைய பனியன் கட்டப்பட்ட நிலையில் வந்துள்ளது. அது குறித்து விசாரித்ததில் நேபாள நாட்டை சேர்ந்த சிவன் என்ற 21 வயது வாலிபர் கன்றுக் குட்டியை பின்னங்காலை கட்டி உடலுறவு கொண்டது தெரியவந்தது. பின்னர், இது குறித்து பொதுமக்கள் மருவத்தூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் கைது செய்த போலீசார் சிவனை பாதுகாப்பாக போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயற்கைக்கு மாறாக விலங்குடன் நேபாள வாலிபர் உடலுறவு கொண்ட சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் 14 வயது சிறுமியை பலாத்கார சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இது போன்று அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.