Perambalur: A stray dog ​​bit eight people, including a child! A drunk man refused to get vaccinated!

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் கிராமத்தில் நேற்று தெருநாய் 8 பேரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று அப்பகுதியில் நடந்து வந்த 3 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 2 வயது ஆண் குழந்தை என 8 பேரையும் கடித்தது. இதில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்து அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒருவர் மட்டும் போதையில் இருந்ததால் அவர் நாய்க்கடிக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அவருக்கு அங்கிருந்தவர் டீ வாங்கி கொடுத்து போதை தெளிந்த பின்னர் அவருக்கு நாய்க்கடி தடுப்பூசி போட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மீண்டும் பலரையும் கடிக்காமல் இருக்க அப்பகுதி வாசிகள் நாயை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!