Perambalur Andimuthu Chinnappillai Foundation provides welfare assistance to HIV positive people!

பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டும், ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் நேற்று முன்தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார். அறங்காவலர் சிவசண்முகம் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். இதில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலர் வினோத்குமார், எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு இயக்குனர் ஸ்ரீநாதன், சிவகாமம் மோட்டார்ஸ் மேலாளர் துளசி, வேலூர் தமிழ்செல்வன், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை மேலாளர்கள் கணேசன், ஜோதிபாசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!