Perambalur City DMK Agents Consultative Meeting
பெரம்பலூர் நகர திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், நகரச்செயலாளர் எம். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாக முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும் எனவும் நீங்கள் விழிப்போடு செயல்பட்டு தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று பேசினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என் .ராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ப. செந்தில்நாதன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ஜான்கென்னடி, மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி. மாரிக்கண்ணன், நகர துணைச் செயலாளர் சபியுல்லா, மாவட்ட பிரதிநிதி ரெங்கநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் அ அப்துல் கரீம், நகர மாணவரணி அமைப்பாளர் பா. ரினோபாஸ்டின், வார்டு கழகச் செயலாளர்கள் சுந்தர்ராஜ், ஜே.எஸ்.ஆர்.கருணாநிதி, லோகநாதன், மணிவாசகம், செந்தில், பரிதி (எ) நீலமேகம் , சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.