Perambalur Collector Information to Link Aadhaar to get P.M. Kisan Scheme 13th Installment!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் 13-வது தவணை தொகையை தொடர்ந்து பெற தங்களது ஆதார் விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளில் 2,000 ரூபாய் வீதம் மொத்தமாக ரூபாய் 6,000 வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13-வது தவணை பி.எம்.கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்ய தவறும் விவசாயிகளுக்கு 13-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப் படமாட்டாது. பதிவேற்றம் செய்ய நவம்பர்-30 ம் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!