Perambalur: Condemnation protest demanding the immediate enactment of a special law against honor killings; call by VCK District Secretary Krishnakumar!

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மதுரை மேலவளவு கிராமத்தில் 2 தலித் இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலை கண்டித்தும், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்துவரும் ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் உடனடியாக இயற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், நாளை 27-8-2026 காலை 10-மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.









kaalaimalar2@gmail.com |
9003770497