Perambalur district schools banned from conducting Online-classes for 5 days; Government Notice

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு:

2020-2021 ஆம் கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட 25.03.2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நாளது தேதி வரை திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு கற்றல் – கற்பித்தல் பணி பாதிப்படையக்கூடாது என்பதால் 2020-2021ம் கல்வியாண்டிற்கான பாடங்களை இணைய வழியாக நடத்துவதற்கு அரசானை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகளின் நலன் கருதி கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகள் இணையவழி மூலம் செப்.21 – 25 வரை நடைபெறாது என தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகள் அந்த நாட்களில் நடத்தக்கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!