Communist Party, 3 district administrators removed! Perambalur District Secretary Announcement!!
கட்சி கட்டுப்பாட்டை மீறி, தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 3 பேர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பெரம்பலுார் மாவட்ட செயலாளர் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், பெரம்பலுார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், மாவட்ட குழு உறுப்பினர்கள் சண்முகம், சீனிவாசன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி, தொடர்ந்து கட்சி விரோத செயலில் ஈடுபட்டு வந்ததால், இவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்கள். கட்சி உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம், என அதில் தெரிவித்துள்ளார்.