Perambalur: Education loan camp; Collector information!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து நடத்தும் கல்விக்கடன் வழங்கும் முகாம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் 20.09.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். கல்விக் கடன் பெற ஆலோசனை வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இக்கல்விக்கடன் பெற, ஆதார் அட்டை மற்றும் பான்கார்டு (மாணவ / மாணவியர் மற்றும் பெற்றோர்). பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 (மாணவ / மாணவியர் மற்றும் பெற்றோர்), வங்கி புத்தக நகல் (மாணவ / மாணவியர் மற்றும் பெற்றோர்), அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் விவரம் (மாணவ / மாணவியர்), 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ்.கல்லூரி சேர்க்கை கடிதம் (College Admission Letter), கல்லூரி சேர்க்கைக்கான கட்டண விவரம் (Fees Structure) (Family Income Certificate), குடும்ப வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் (Community Certificate) (மாணவ / மாணவியர்), முதல் பட்டதாரி சான்று (இருப்பின்) ஆகிய ஆவணங்களுடன் 20.09.2025 முகாமில் கலந்து கொண்டு உடனடியாக கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை நேரிலோ அல்லது 94422 71994 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!