Perambalur: Gold jewellery fraud incident; Customers protest by besieging the bank!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் யூனியன் வங்கி ஆஃப் இந்தியா வங்கி கிளையில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் நகை மதிப்பீட்டாளரால் கடந்த ஆண்டு மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக இதுவரை தங்க நகைகள் திருப்பித் தரப்படாமல் உள்ள நிலையில், தங்களுடைய நஷ்டத்தை ஈடு செய்யக் கோரி வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வங்கியின் முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களிடம் குன்னம் போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!