Perambalur: Krishnakumar announced as the VCK District Secretary; introductory meeting tomorrow!

பெரம்பலூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி) மாவட்ட செயலாளராக ந.கிருஷ்ணகுமாரை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாகவளன் அறிவித்துள்ளார். அதன்படி, நாளை 6.01.2026 செவ்வாய்க்கிழமை காலை 10-மணிக்கு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அஸ்வின் பார்ட்டி ஹாலில் ” அறிமுக கூட்டம்”
(புதிய மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட செய்தித் தொடர்பாளர்) நடைபெறுகிறது. எனவே, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டல, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்த்தி கட்சியின் வளர்ச்சிக்கு நல்ஒத்துழைப்பு வழங்க வேண்டுமான கேட்டுக்கொள்கிறேன் என புதிய மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!