Perambalur: Man arrested for fraud by promising profits if he starts a trust!

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் புதுமாரியம்மன் கோவில தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் முரளி (32). இவரிடம், ஈரோடு மாவட்டம், பி.மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் செந்தில்குமார் என்பவர் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) – கமலம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளைத் திட்டத்தைத் தொடங்கப் போவதாகவும், அதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி, முரளியிடமிருந்து ரூ. 88,28,900/- பணத்தை செந்தில்குமார் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497