Perambalur: MLA Sivasankar expressed his gratitude village by village across the Kunnam constituency.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து குன்னம் தொகுதியில் உள்ள கோவில்பாளையம் துங்கபுரம் காரைபாடி, வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், வதிஷ்டபுரம், அகரம்சீகூர், கல்லை, வேப்பூர், பரவாய் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்காளர்களை சந்தித்து திமுக-விற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ததுற்கு நன்றி தெரிவித்தார்.

முன்னாள் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளளர் வீ. ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், அழகு நீலமேகம், முன்னாள் வேப்பூர் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, ஒகளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கு.க.அன்பழகன், ஆண்டாள் குடியரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!