Perambalur: More than a hundred arrested in ganja cases in a year!

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 01.07.2024 முதல் 31.07.2025 வரை 82 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 16.45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 105 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மற்றும் வைத்திருந்தது தொடர்பாக 01.07.2024 முதல் தற்போது வரை 305 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1779.83 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பஞ்சாம வளர்ச்சிகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 16.45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 314 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 19 குற்றவாளிகள் மீதும் 2025 ஆம் ஆண்டு 6 குற்றவாளிகள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதை பொருட்களுக்கு எதிராக 450 க்கும் மேலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்டுள்ளது என்றும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களின் போதை பொருள் உபயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் 197 போதைக்கு எதிரான குழுக்கள் (ANTI DRUG CLUB) அமைக்கப்பட்டு அதன் மூலம் போதை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் போதை மற்றும் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டது. 2024-ம் ஆண்டு கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 133.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் ஒழிப்பு குழு மூலம் அழிக்கப்பட்டது என மாவட்ட காவல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497